முத்தான மூன்று நாட்கள் 
மகிழ்ச்சியை மட்டுமே உன்ற மூன்று நாட்கள் 
இரவுகள் இனிமையாயின - உன் அணைப்பில் இருந்த அந்த நிமிடங்களில் 
மனம் தவித்தது - விடியலின் 
வருகை தாமதிக்காத என 
அந்த நிமிடத்து மகிழ்ச்சியை மட்டுமே அனுபவிக்காமல் - நாளைய 
தனிமையை நினைத்து பயந்தது மனது 
ஏனெனில்,
வெறும் சிற்பமாய் இருக்கும் நான் - சிறிது 
கவலை மறப்பதும் மகிழ்வதும் உன்னோடே 
நீ உடன் இல்லாத நொடிகளில் - மனம் கனக்கிறது 
தனிமையின் தாக்கத்தால் 
அந்த நொடிகளில் எனக்கான உற்சாகம் 
நம் மழலையின் சிரிப்பே !!! 
ஒரு கனவுக்கான இலக்கியம் நீ ; உண்மை அன்பிற்கான 
அகராதியும் நீயே 
என்னை சுயநலவாதி ஆகியவன் நீ, 
பகிர்ந்து கொள்ள முடிய பாசம் உன்னுடையது -
 நீ எனக்கு கட்டியது தாலி மட்டுமல்ல,
கடிவாளமும் தான் - உன்னை தாண்டி எதையும் 
பார்கவோ சிந்திக்கவோ மற(ரு)க்கிறதே என் மனம் !!!
No comments:
Post a Comment